பிப். 14 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடக்கம் – மாநில அரசு உத்தரவு!
நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் காரணமாக கடந்த மாதம் முதல் பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் பிப்.7 ஆம் தேதி முதல் உயர்நிலை வகுப்புகளுக்கும் பிப்.14 ஆம் தேதி முதல் மழலையர் வகுப்பு வரை அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் இருந்து படிப்படியாக மக்கள் மீண்டு வரும் நிலையில் கடந்த மாதம் கொரோனாவின் மூன்றாம் அலை தாக்கம் ஏற்பட்டது. அதனால் மாநில அரசுகள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தின. பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருக்கும் கேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மாதம் மூடப்பட்டது.
பிப். 7ம் தேதி முதல் பள்ளி & கல்லூரிகள் முழு நேரம் இயங்க அனுமதி – முதல்வர் உத்தரவு!
இந்நிலையில் அரசின் துரித நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பள்ளிகளில் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் வருகிற பிப். 7 ஆம் தேதி முதல் திறக்கப்படும் எனவும், மழலையர் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் பிப். 14 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை – குழப்பத்தில் மாணவர்கள்!
கொரோனா பரவல் தற்போது சரிவை கண்டாலும் மேலும் அதிகரிக்காமல் இருக்க பல கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தி இருக்கிறது. கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு பயணிகள் மாநிலத்திற்குள் நுழைய கொரோனா பரிசோதனை கட்டயாமாக்கப்பட்டுள்ளது. மேலும் 15 முதல் 18 வயது வரை இருக்கும் மாணவர்களில் 72 சதவிகித மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.