விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – மருத்துவமனையில் மூர்த்தியுடன் தனம் & ஜீவா!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - மருத்துவமனையில் மூர்த்தியுடன் தனம் & ஜீவா!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - மருத்துவமனையில் மூர்த்தியுடன் தனம் & ஜீவா!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – மருத்துவமனையில் மூர்த்தியுடன் தனம் & ஜீவா!

கதிரும், முல்லையும் வீட்டைவிட்டு கிளம்பியதால் மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது. இதனால் குடும்பத்தினர் மூர்த்தியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் ரீலிஸ் செய்து மகிழும் படியான வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையும் கதிரும் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள். அதாவது முல்லைக்கு குடும்பத்தினர்கள் ரூ.5 லட்சம் வரைக்கும் செலவு செய்ததை மீனாவின் அப்பா ஜனார்த்தனன் அவ்வப்போது சொல்லிக் கொண்டு இருந்ததால் இதற்கு மேலும் இந்த வீட்டில் இருக்கவேண்டாம் என வீட்டை விட்டு கிளம்புகிறார். 5 லட்ச ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுக்கும் வரைக்கும் இந்த வீட்டு வாசப்படியில் நான் கால் வைக்க மாட்டேன் என கதிர் கூறுகிறார்.

கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா, பாவமான நிலைக்கு தள்ளப்பட்ட பாக்கியா – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

கண்டிப்பாக நம்முடைய கடையில் நான் வேலை செய்ய மாட்டேன். ஏதோ ஒரு கடையில் வேலை செய்தாவது கண்டிப்பாக கடனை அடைத்து தீருவேன் என முல்லையை அழைத்துக்கொண்டு கதிர் வெளியே கிளம்புகிறார். வீட்டை விட்டு நீ சென்று விட்டால் அதன் பின்பு வீட்டிற்குள் வரவே முடியாது என மூர்த்தி கூறுகிறார். ஆனால், அதை கதிர் காதில் வாங்காமல் முல்லையை மட்டும் அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார். கதிர் வீட்டை விட்டு வெளியேறியதும் மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது.

Exams Daily Mobile App Download

மூர்த்தியை குடும்பத்தினர்கள் அனைவரும் சேர்ந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மூர்த்திக்கு நெஞ்சு வலி வந்த பிறகாவது மீண்டும் முல்லையை அழைத்துக்கொண்டு கதிர் வீட்டிற்கு வருவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது மருத்துவமனையில் ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருப்பதால் அங்கு கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் ரீலிஸ் செய்து மகிழும் படியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மூர்த்தி நெஞ்சுவலி வந்து படுத்து இருக்கும் போதும் கூட உங்களுக்கு என்ன இந்த ஆட்டம் என ரசிகர்கள் நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!