கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா, பாவமான நிலைக்கு தள்ளப்பட்ட பாக்கியா – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

0
கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா, பாவமான நிலைக்கு தள்ளப்பட்ட பாக்கியா - புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா, பாவமான நிலைக்கு தள்ளப்பட்ட பாக்கியா - புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா, பாவமான நிலைக்கு தள்ளப்பட்ட பாக்கியா – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற அனைத்து உண்மையையும் ராதிகா அறிந்து கொண்ட பின்பு கோபியை விட்டு விலக நினைத்தார். ஆனால், தற்போது தனக்காக தானே கோபி இவ்வளவு விஷயத்தையும் செய்திருக்கிறார் என கோபியை ஏற்றுக் கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை ராதிகா ஏற்றுக்கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது கோபியின் மனைவி தான் பாக்கியா என்கிற அனைத்து உண்மையையும் ராதிகா அறிந்து கொள்கிறார். இத்தனை நாட்களாக தனது நெருங்கிய தோழியின் கணவரை தான் திருமணம் செய்ய நினைத்தோமா என தனக்குள் போட்டு குழப்பிக் கொண்டே இருக்கிறார். ஆனாலும் கோபி ராதிகாவை விடுவதாக இல்லை.

வெண்பாவிற்கு சாரதியுடன் வேகமாக திருமணம் செய்து வைக்க திட்டமிடும் ஷர்மிளா – சீரியலில் அடுத்த திருப்பம்!

அவ்வபோது வீட்டிற்கு வந்து எனக்கு நீ தான் முக்கியம் பாக்கியாவினை விவாகரத்து செய்ய வேண்டும் என்றுதான் நினைத்தேன் என ராதிகாவை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். எனக்கு பாக்கியாவுடன் வாழ சுத்தமாக விருப்பமில்லை. உன்னையும், மயுவையும் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன் என கூறுகிறார். ராதிகாவின் அம்மாவும் ராதிகாவையும் கோபியையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார். நீங்கள் ராதிகாவிடம் முதலிலேயே இந்த விஷயத்தை கூறி இருந்தால் ராதிகாவிற்கு இவ்வளவு பெரிய கஷ்டம் வந்திருக்காது. ராதிகாவும் உங்களை இந்த அளவுக்கு வெறுத்திருக்க மாட்டார் எனக் கூறுகிறார்.

Exams Daily Mobile App Download

ராதிகா என்னை விட்டு சென்று விடுவாரோ என்கிற பயத்தில் தான் ராதிகாவிடம் இந்த விஷயத்தை நான் கூறவில்லை என கூறி சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். பின்பு ராதிகா கோபி ஏமாற்றிய விஷயம் ஒவ்வொன்றையும் நினைத்து பார்க்கிறார். கோபி நம்மை காதலித்ததால் தானே இவ்வளவு பொய்களை கூறி இருக்கிறார் என கூறி ராதிகா கோபியை ஏற்றுக் கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. கோபியை ராதிகா ஏற்றுக்கொண்டால் பாக்கியாவின் நிலைமை என்னவாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!