அறிவுரை சொன்ன தனம், கேட்க மறுக்கும் கதிர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அடுத்து வருபவை!
விஜய் டிவியின் முக்கிய மெகா தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் புதிய திருப்பங்கள் நடந்து வருகிறது. தற்போது கதிர் வீட்டை விட்டு போன அதிர்ச்சியில் மூர்த்திக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கதிரின் முடிவு:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூட்டுக் குடும்பத்தின் சிறப்பையும், அதன் முக்கியத்துவத்தையும் பற்றி சொல்லி வருகிறார்கள். இந்த காலத்தில் கூட்டுக் குடும்பம் என்பது சாதாரணமாக அனைத்து இடங்களிலும் காண முடியாத அதிசயமாக மாறி விட்டது. ஆனால், மிகவும் ஒற்றுமையாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும், அந்நியர்களின் செயலால் குடும்பம் தற்போது பிரிந்து விட்டது. தனம் அண்ணியின் பிறந்த நாள் அன்று குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாட ஆசைப்படுகின்றனர்.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அச்சத்தில் பொது மக்கள்!
அதன்படி, தனத்தின் குடும்பத்தினர், மீனாவின் அம்மா, அப்பா, முல்லையின் அம்மா, அப்பாவை கூப்பிடுகின்றனர். இவர்கள் அனைவரும் வந்து ஒருவரை ஒருவர் குறை சொல்லி, கடைசியில் முல்லைக்கு சிகிச்சைக்கு கடன் வாங்கியது பெரிய குற்றம் என்ற அளவில் வந்து நின்றது. இதனால் கதிரும் முல்லையும் வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கூட கதிர் கேட்கவில்லை. இதனால் மூர்த்திக்கு நெஞ்சு வலி வந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
மூர்த்தியின் ஆபரேஷனுக்கு ரூ.2 லட்சம் செலவாகும் என்று சொல்லி விடுகின்றனர். இதை அறிந்து கதிர் மூர்த்தியை பார்க்க மருத்துவமனைக்கு வருகிறார். அப்போது அண்ணியிடம் கதிர் அழுகிறார். இதனால் தனம் இப்போது கூட ஒன்றும் இல்லை, நீ மட்டும் நம்ம வீட்டுக்கு திரும்பவும் வரேன்னு சொல்லி பாரு, அண்ணன் எந்துருச்சுருவாரு என்று தனம் கூறுகிறார். ஆனால் கதிர், நான் முன்னாடி சொன்ன மாதிரி முல்லைக்காக வாங்குன கடனை கொடுத்துட்டு தான் திரும்பவும் வீட்டுக்குள்ள வரவேன்னு சொல்லி விடுகிறார்.