பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய கதிர் – ரசிகர்கள் ஷாக்! இனி இவருக்கு பதில் இவர்!
முல்லைக்கு கருவுறும் சிகிச்சை வெற்றியை கொடுக்குமா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த குமரன் சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. செயற்கை முறை கருவுறுதல் முல்லைக்கு வெற்றியை கொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அதாவது முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர் கூறியதை தொடர்ந்து செயற்கை முறையில் சிகிச்சை எடுக்கலாம் என குடும்பத்தினர்கள் முடிவு செய்கின்றனர்.
கோபி, ராதிகா பற்றிய உண்மையை குடும்பத்தினர் முன்னிலையில் கூறிய தாத்தா – சீரியலில் இனி வருபவை!
ஆனால், செயற்கை முறை கருவுறுதலுக்கு நிறைய செலவாகும் என்பதால் தற்போதைக்கு வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என மூர்த்தி கூறுகிறார். தற்போது தான் பல ஆண்டுகள் கழித்து வீடு கட்ட இருக்கிறோம். அதையும் தற்போது நிறுத்த வேண்டுமா என குடும்பத்தினர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஆனாலும், முல்லைக்கு சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதால் ஒப்புக்கொள்கின்றனர். மீனாவிற்கு மட்டும் இதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. அனைவர்க்கும் சொந்தமான இந்த வீட்டை ஏன் முல்லைக்காக மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டும் என மீனா சண்டை போடுகிறார்.
பின்பு, எப்படியோ மூர்த்தி மற்றும் ஜீவா சேர்ந்து சிகிச்சைக்கு தேவையான தொகையை ரெடி செய்கிறார். இந்த வாரம் முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சையை தொடங்கவுள்ளனர். இந்த சிகிச்சை வெற்றி பெறுமா என பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கும் வேளையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த குமரன் சீரியலில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவருக்கு பதிலாக புதுமுக நடிகர் அறிமுகமாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.