‘பாண்டியன் ஸ்டார்ஸ்’ நடிகை ஐஸ்வர்யாவிற்கு சாபம் விட்ட ரசிகர் – அவரே அளித்த விளக்கம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நடித்து வருபவர் விஜே தீபிகா. இவர் கூட்டுக் குடும்பமாக இருந்த கண்ணனை திருமணம் செய்து பிரித்து விட்டார் என ரசிகர்கள் சாபம் விட்டு வருகின்றனர். இதற்கு அவர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவி சீரியல்களில் கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சீரியலாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே தீபிகா. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அவர் கல்லூரி படிக்கும் போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வந்துள்ளார். சிறிய கிராமத்தை சேர்ந்த அவர் தனது வீட்டு தோட்டம், செடிகள் குறித்த வீடியோவை தனது யூடூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 முக்கிய தடுப்பு நடவடிக்கைகள் – மத்திய அரசு!
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரம் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதில் வீட்டின் எதிர்ப்பை மீறி கண்ணனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அதனால் கண்ணன் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார். மேலும் அண்ணன், அண்ணி பாசத்துடன் நன்றாக சாப்பிட்டு வளர்ந்த கண்ணன், ஐஸ்வர்யாவுடன் காதலுக்காக கஷ்டப்படுகிறார். இதை பார்த்து ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கமெண்ட்களை பதிவிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதில் ‘ பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்த்து உங்கள வெறுக்க ஆரம்பிச்சுட்டேன். நீங்க எது பண்ணாலும் எனக்கு பிடிக்காமல் போகுது’ என தெரிவித்துள்ளார். அதை பார்த்த தீபிகா அதிர்ச்சி அடைந்து, ‘என்னங்க சாபம் விடுறீங்க, அது வெறும் நடிப்பு தான். சீரியஸா எடுத்துகாதீங்க’ என என பதில் அளித்துள்ளார். தற்போது அவரின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிகிறது. ஆனால் சீரியலில் அவரின் இயல்பான சிறந்த நடிப்பே இப்படிப்பட்ட கமெண்ட்களுக்கு காரணமாக உள்ளது.