பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் செய்த காரியம் – 4 மணிக்கு விஜய் டிவி பாருங்க!
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் எப்படி வீட்டில் படித்தார் என்று முல்லை அனைவரிடமும் கூறுகிறார். கதிர் படித்தால் வீட்டில் அனைவரும் சந்தோசம் அடைவார்கள் என்ற காரணத்திற்காக தான் அவரை படிக்க வற்புறுத்தியதாக முல்லை கூறுகிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் கதிர் நல்ல மார்க் எடுத்து வெற்றி அடைந்ததனால் வீட்டினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அதே போல் படிக்க வேண்டும் என்று தோன்றியதற்கான காரணம் குறித்து தனம் முல்லையிடம் கேட்கிறார். கதிர் சிறு வயதிலேயே நன்றாக படித்ததாகவும், மீண்டும் படித்தால் வீட்டினர் அனைவரும் சந்தோசம் அடைவர் என்ற காரணத்திற்காக தான் கதிரை படிக்க தான் தூண்டியதாக முல்லை கூறுகிறார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – பாதுகாப்பு நெறிமுறைகள்!
பின், கதிர் படித்து நல்ல மதிப்பெண் எடுத்ததையும், டிவியில் இருந்து வந்து பேட்டி எடுத்ததையும் குறித்து தனம் தனக்கு தெரிந்தவர்கள் அனைவரிடமும் கூறுகிறார். இதனை கேட்டு அனைவரும் கதிருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். பின், 4 மணிக்கு தங்களது பேட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்றும் கூறி மகிழ்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
தனம் தங்களது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் அனைவரிடமும் கதிர் வெற்றி அடைந்ததை பெருமையாக கூறுகிறார். அவர்களும் கதிருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். இப்படியாக இருக்க, தனம் இப்படி அனைவரிடமும் கூறுவதனை கேட்டு கதிருக்கு கூச்சமாக இருக்கிறது. பின், தனம் முல்லையை அழைத்து திருஷ்டி சுற்ற சொல்லுகிறார். முல்லையும் மகிழ்ச்சியுடன் திருஷ்டி சுற்றுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.