தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – பாதுகாப்பு நெறிமுறைகள்!
தமிழகத்தில் கடந்த மாதம் வரை பல இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் மின் விபத்துகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மின்வாரியம் அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமாக 9 மாதங்களாக பராமரிப்பு பணிகள் செய்யாததே என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு ஜூன் 29 வரை முடிவடைந்துள்ளது. தற்போது எந்த இடத்திலும் தேவையில்லாமல் மின்சார தடை ஏற்படவில்லை.
தமிழகத்தில் ஜூலை 16 வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
மேலும் மின்சார தடை குறித்த புகார்களை தெரிவிக்க மின்னகம் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் மின்சார தடை குறித்து புகார் தெரிவித்து விளக்கம் பெறலாம். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காலம் தொடங்கி விட்டது. எனவே அதிகமான காற்று ஏற்படும் போது மின் தொடர்பான விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து மின்வாரியம் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, காற்று மற்றும் மழை காலங்களில் மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின் மாற்றிகள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகே செல்ல வேண்டாம் எனவும், மின் கம்பிகளுக்கு அருகே நிற்பதையும், வாகனங்கள் நிறுத்துவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ, தொட முயற்சிப்பதோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் விபத்துகள் ஏற்பட்டால் உடனே மின்சார வாரியத்திற்கு தெரிவிக்க வேண்டும் அல்லது மின்னகம், மின் நுகர்வோர் சேவை மையம் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.