பான் கார்டு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – ஆதாரை இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.. தவறினால் சிக்கல்!!
இந்தியாவில் பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பெயரில் இதுவரை 48 கோடி பேர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பான் – ஆதார் இணைப்பு:
இந்தியாவில் மத்திய ஆதார் அமைச்சகத்தால் வழங்கப்படும் ஆதார் அட்டை, அடையாள ஆவணமாக விளங்கி வருகிறது. தற்போது ஆதார எண் இருந்தால் மட்டுமே அரசின் அனைத்து சேவைகளையும் பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
தற்போது ஆதாரை போலவே பான் கார்டும் மிக முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. நாட்டில் வரி ஏய்ப்புகளை தடுக்கவும், பண பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளை கண்டறியவும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டு அவை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது.
தமிழகத்தில் பெண்கள் இலவச பேருந்து பயண திட்டம் – அமைச்சர் அளித்த விளக்கம்!!
இந்த காலகெடுவுக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ. 1000 செலுத்தி பான் – ஆதாரை இணைத்து வருகின்றனர். இதற்கு 2023 மார்ச் மாதம் 31ம் தேதி கடைசி நாளாகும். இந்த தேதிக்குள் மேற்சொன்ன நடவடிக்கையை முடிக்காதவர்களின் பான் கார்டு செயலிழந்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 48 கோடி பேர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.