விஜய் டிவியில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற ‘பாக்கியலட்சுமி’ சுசித்ரா – ரசிகர்கள் வாழ்த்து!
கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியில் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறந்த நடிகைக்கான விருதை பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா தான் பெற்றுள்ளார்.
சிறந்த நடிகைக்கான விருது
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. வீட்டு வேலைகளை குடும்ப தலைவிகள் பார்க்கிறார்களோ இல்லையோ சீரியல்களை தவறாது பார்த்து விடுகின்றனர். விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் பெரும்பாலும் அன்றாட ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் நிகழ்வுகளை படம் போட்டு காட்டுவதால் மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ExamsDaily Mobile App Download
கணவனை மட்டும் நம்பி தனது வாழ்க்கையை அவருக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் பாக்கியலட்சுமியை பற்றிய கதையாகத் தான் பாக்கியலட்சுமி தொடர் அமைந்து வருகிறது. இவ்வளவு அன்பையும் பாசத்தையும் கொடுத்தாலும் பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்ய கோபி தயாராகி வருகிறார். டிஆர்பியிலும் பாக்கியலட்சுமி தொடர் தான் முன்னிலையில் இருந்து வருகிறது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொள்வாரா, அல்லது பாக்கியாவின் பாசத்தை புரிந்துகொண்டு பாக்கியாவை நன்றாக பார்த்து கொள்ள போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தனது குழந்தையுடன் ஆலியா மானஸா வெளியிட்ட கியூட் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
இந்நிலையில்,கடந்த வாரம் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறந்த சீரியல் என்ற விருதை பாக்கியலட்சுமி தொடர் தான் பெற்றுள்ளது. மேலும், சிறந்த நடிகை விருதை பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா தான் பெற்றுள்ளார். நான் சினியுலகில் அறிமுகமானத்திற்கு என் அம்மா தான் காரணம். ஆனால், சிறந்த நடிகைக்கான விருதை நான் வாங்கும் போது எனது அம்மா என் அருகில் இல்லை என கலங்கியபடி அந்த விருதை பெற்றுள்ளார்.