ஏற்கனவே Twist மேல Twist.. இப்போ இவங்க என்ட்ரி வேறயா – பாக்கியலட்சுமி சீரியலில் புது வரவு!
தற்போது ஒளிபரப்பாகும் விஜய் டிவி தொடர்களில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் டெலிகாஸ்ட் செய்யப்படும் தொடர் தான் பாக்கியலட்சுமி. தற்போது இந்த சீரியலில் மற்றொரு பிரபலம் என்ட்ரி கொடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா போல அருமையான மனைவி கிடைத்தும் அதை கோபி நினைக்கவில்லை. தன் கல்லூரி பருவ காதலியான ராதிகா பின்னால் சுற்றி அவரை திருமணம் செய்யும் அளவுக்கு துணித்துவிட்டார் கோபி. ராதிகா ஆரம்பத்தில் பாக்கியா வாழ்க்கை பற்றி யோசித்தாலும் பின்னர் அதை பற்றி சிந்திக்காமல் தற்போது சற்று சுயநலமாக வாழ நினைக்கிறார்.
கோபி ராதிகாவின் வரவேற்பு நிகழ்ச்சி, திருமணம் ஆகியவை இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளது. ஏற்கனவே ராதிகாவை இவ்வாறு மாற்றியதே ராதிகாவின் அம்மா, அண்ணன் தான். தற்போது ராதிகாவின் அண்ணியாக மற்றொரு நடிகை என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை.. தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் பூங்காவனத்தின் மனைவி ரோலில் நடிக்கும் வில்லி நடிகை தான்.
ஏற்கனவே ராதிகாவை அவரின் குடும்பத்தார் ஏற்றிவிட்டு கோபியை திருமணம் செய்ய சம்மதிக்க வைத்துவிட்டனர். தற்போது வில்லியாக வந்திருக்கும் இந்த புது வரவு ராதிகாவை எவ்வாறு மாற்ற போகிறார் என பொறுத்து இருந்து பார்ப்போம்.. இவரால் அந்த திருமணத்தில் சமைக்க உள்ள பாக்கியாவிற்கு ஏதும் பிரச்சனை வருமா என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்