கோபி & ராதிகாவின் உறவை பற்றி அறிந்து கொள்ளும் பாக்கியா – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் அடுத்து வருபவை!
கோபிக்கு தற்போது கார் விபத்து ஏற்பட்டு படுத்தப்படுக்கையாக மருத்துவமனையில் இருக்கிறார். இந்நிலையில், கோபியை பார்க்க ராதிகா மருத்துவமனைக்கு வரும்போது பாக்கியா அனைத்து உண்மையையும் தெரிந்துகொள்ளும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் பாக்கியாவை தவிர அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இதற்கு பிறகு குடும்பத்தினர்கள் அனைவரும் பாக்கியாவிற்கு தெரியாமல் இந்த விஷயத்தை மறைக்க போகிறார்களா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது, ராஜேஷ் வந்து கோபியின் வீட்டில் இனிமேல் என் மனைவியை சந்திக்க கோபி வர கூடாது என கத்திவிட்டு செல்கிறார். இதனால், ஈஸ்வரிக்கு கோபி மீது சந்தேகம் வர ராமமூர்த்தி தாத்தா அனைத்து உண்மையையும் ஈஸ்வரியிடம் கூறுகிறார்.
Exams Daily Mobile App Download
உடனே, ஈஸ்வரி கோபிக்கு கால் செய்து வீட்டில் நடந்த விஷயத்தை பற்றி கூறி உடனடியாக வீட்டிற்கு வரும்படி கூறுகிறார். இதற்கு பிறகும் பொய் சொல்லி எதையும் மறைக்க முடியாது என கோபி பதட்டப்படுகிறார். பதட்டத்தில் கோபியின் காருக்கு முன்னால் வந்துகொண்டிருந்த லாரியை கவனிக்காமல் லாரி மீது மோதி விபத்தில் சிக்கி கொள்கிறார். உடனே, கோபியை அருகிலுள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்க்கின்றனர். பின்னர், மருத்துவமனையில் இருந்து பாக்கியாவிற்கு கால் செய்து உங்களது கணவருக்கு Accident ஆகி விட்டது உடனே வாருங்கள் என அழைக்கிறார்கள்.
இதுமட்டுமல்லாமல், மறு நொடியே ராதிகாவிற்கும் கால் செய்து உங்களது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறுகிறார்கள். பின்பு, ராதிகா மற்றும் பாக்கியா இருவருமே பதறி போய் மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்நிலையில், ராதிகாவும் மருத்துவமனையில் இருப்பதை பாக்கியா பார்த்துவிடுகிறார். ஆரம்பத்தில், ராதிகாவை பார்த்ததும் பாக்கியாவிற்கு சந்தேகம் வரவில்லை. அங்குள்ள மருத்துவர்கள் கோபியின் மனைவி என ராதிகாவை அழைப்பதை பார்த்து பாக்கியாவிற்கு அனைத்து உண்மைகளும் தெரியவரும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஆனால், கோபிக்கு accident ஆகி இருப்பதை பார்த்துவிட்டு ராதிகா எப்படியும் சும்மா இருக்கமாட்டார். இதன்பிறகு, கோபியை மீண்டும் ராதிகா ஏற்றுக்கொள்வாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.