ஆசிரியர் பயிற்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடி பணி நியமனம் – செங்கோட்டையன் அறிவிப்பு!!
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனே பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்ச்சி பெற்றவர்களிடம் உறுதி அளித்தார்.
பணி நியமன ஆணை உத்தரவு:
நாடு முழுவதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக CTET எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) நடத்தி வருகின்றது. இதேபோல் மாநிலங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சார்பில் தகுதித் தேர்வு TET நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர் பணி வழங்கப்படும்.
சிவில் தேர்வு மீண்டும் நடத்த வேண்டும்- மத்திய அரசு பரிசீலினை!!!
ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2144 பேரில் 329 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை ஆசிரியர்கள் சார்பாக சென்னை பசுமைவழி சாலையில் உள்ள முதலமைச்சர் வீடு முன்பு முற்றுகையிட்டனர். பின்னர் காவல்துறையினர் அவர்களிடம் மனுவை பெற்றுக்கொண்டு அவர்களை வெளியேற்றினர்.
அதன்விளைவாக தற்போது தேர்ச்சி பெற்ற அனைத்தும் ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணை விரைவில் அளிக்கப்படும் என மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார். கோபிச்செட்டிபாளையத்தில் ஆசிரியர் தகுதி தேர்ச்சி பெற்றவர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது,”ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்ற அனைவர்க்கும் விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும்”, என உறுதி அளித்தார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்