திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இயற்கை உணவு – பக்தர்களுக்கு விற்பனை!
திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் இயற்கை வேளாண் பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட உணவு விற்பனை சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. மேலும் இயற்கை பிரசாதங்கள் மூலம் சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.
இயற்கை உணவு:
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர். கடந்த வருடம் முதல் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வருகைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில் முன்பதிவு அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதந்தோறும் ரூபாய் 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தானம் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து விரைவு தரிசன கோட்டாவை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
செப் 1 ஆம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாது – கல்வி அமைச்சர்!
மேலும் திருப்பதி திருமலையில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் கண்ணாடி, செம்பு, எவர்சில்வர் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய கடைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் இயற்கை வேளாண் பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட உணவு விற்பனை சோதனை ஓட்டம் தொடங்கியது. அதன்படி நேற்று திருமலை அன்னமய்யா பவனில் ‘சம்பிரதாய போஜனம்’ என்ற பெயரில் காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு ஆகியவை தயார் செய்து வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்ந்து 5 நாட்கள் 500 பேருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இயற்கை உணவு பொருட்கள் திட்டத்தை நாடு முழுவதும் உள்ள பல நட்சத்திர உணவக உரிமையாளர்கள் தாங்களாக முன்வந்து செய்ய தொடங்கியுள்ளனர். இந்த இயற்கை உணவுப் பொருட்கள் தயார் செய்வதற்கு எவ்வளவு செலவாகிறது என்பது குறித்து திட்டமிட்டு பின்னர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.