தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – கல்வித்துறை வெளியீடு!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் காலை 9 மணிக்குள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு :
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமும் அரசின் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் நடைபெற்று வருகிறது. 12 ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மற்ற வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. 11 ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு அவர்களின் 9 வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்பு – இன்று கடைசி நாள்!
அதனை தொடர்ந்து புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது . இதனால் கொரோனா பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் இந்த வருடம் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது என தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த வருடத்திற்கான கல்வி பாடங்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக தொடர்ந்து நடத்தப்பட்டு பெறுகிறது.
TN Job “FB Group” Join Now
இலவச புத்தகங்கள் அனைத்து பள்ளிகள் மூலமாகவும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூன் 14 முதல் ஆசிரியர்கள் வருகை புரிந்து வருகின்றனர். சுழற்சி முறையில் அலுவலக பணிகளையும் பள்ளியின் சேர்க்கை பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் காலை 9 மணிக்கும் பள்ளிக்கு வருகை புரிந்திருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆசிரியர்கள் உரிய நேரத்தில் வருவதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.