தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்பு – இன்று கடைசி நாள்!

0
தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்பு - இன்று கடைசி நாள்!
தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்பு - இன்று கடைசி நாள்!
தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்பு – இன்று கடைசி நாள்!

அகில இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுகளை தமிழகத்தில் நடத்துவது குறித்து மக்கள் தங்களது கருத்துகளை அனுப்புவதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (ஜூன் 23) முடிவடைகிறது.

நீட் தேர்வு

இந்திய அளவில் மருத்துவப்படிப்புகளுக்காக நீட் நுழைவுத்தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளை பெற்றுக்கொள்ள, ஒவ்வொரு மாணவர்களும் நீட் நுழைவுத்தேர்வை எழுதவேண்டியது கட்டாயமாகும். இதற்கிடையில் நீட் நுழைவுத்தேர்வு அனைத்து மாணவர்களும் பொருந்தக்கூடியது அல்ல மத்திய அரசுக்கு என பல எதிர்ப்புகளும், கோரிக்கைகளும் எழுந்து வருகிறது.

மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி!

தமிழகத்தில் நீட் தேர்வை நடத்தக்கூடாது என கடுமையான எதிர்ப்புகள் உருவாகியுள்ளது. அதனால் நீட் தேர்வு குறித்த பாதிப்புகளை ஆராய்ச்சி செய்ய ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 8 அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து தேர்வுகள் குறித்த ஆலோசனைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, நீட் தேர்வு குறித்த பொது மக்களது கருத்துக்களையும் நாடியது.

அதன் அடிப்படையில், தமிழகத்தில் நீட் தேர்வுகளை நடத்தலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்த மக்களது கருத்துக்களை வரவேற்கும் விதமாக, அதற்கான விளக்கங்களை 5 பக்கத்திற்கும் மிகாமல் எழுதி, அவற்றை மின்னஞ்சல் மூலமாகவோ, நேரடியாகவோ மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. அந்த வகையில் இதுவரை நீட் தேர்வு குறித்த 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துக்கள் கிடைத்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இவற்றில் பெரும்பாலான கருத்துக்கள் நீட் தேர்வுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களது கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு, நீட் தேர்வுகள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்வதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (ஜூன் 23) முடிவடைகிறது. அதனால் இன்னும் ஒரு சில வாரங்களில் நீட் தேர்வு குறித்த அறிக்கையை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அரசிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!