தமிழகத்தில் கனமழை கொட்டித்தீர்க்கும் – 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெய்ய தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் எடுத்துள்ளது. கரையை கடந்த மாண்டாஸ் புயலின் தொடர்ச்சியாக தற்போது தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பரவலாக பெய்து வருகிறது. அடுத்ததாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்கம் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்று இரவு வரை தொடர்ந்து பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிகரெட் விற்பனைக்கு தடை? மத்திய அரசு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, திருச்சி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நாளை வரை லேசானது முதல் கனமழைக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.