தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி, தெற்கு ரயில்வே நிர்வாகம் ரயிலை இயக்கவுள்ள தேதி உள்ளிட்ட விவரங்களை செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்கள்:
எா்ணாகுளம் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்: (எண்: 06046)
கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து செப்டம்பர் 1ஆம் தேதி இரவு 10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் நண்பகல் 12 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.
சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம் சிறப்பு ரயில்: (எண்: 06045)
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை 3.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று சென்று மறுநாள் காலை 3 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
தாம்பரம் – மங்களூரு சிறப்பு ரயில்: (எண்: 06041)
தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி, பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.45 மணிக்கு மங்களூரு ரயில் நிலையத்தை சென்றடையும்.
மங்களூரு – தாம்பரம் சிறப்பு ரயில்: (எண்: 06042)
மங்களூருவில் செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒட்டப்பாலம், ஷோரனூர், குட்டிபுரம், திரூர், கோழிக்கோடு, வடகரை, தலச்சேரி, காசர்கோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று சென்று மறுநாள் காலை 4 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
Exams Daily Mobile App Download
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கை – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
தாம்பரம் – கொச்சிவேலி சிறப்பு ரயில்: (எண்: 06043)
தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் பகல் 12 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தை சென்றடையும்.
கொச்சுவேலி – தாம்பரம் சிறப்பு ரயில்: (எண்:06044)
கொச்சுவேலியில் இருந்து செப்டம்பர் 5ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒட்டப்பாலம், திருச்சூா், ஆலுவா, கொல்லம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று சென்று மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
நாகர்கோவில் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்: (எண்: 06048)
நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 11ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது, திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி,அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கொச்சுவேலி – பையப்பனஹள்ளி சிறப்பு ரயில்: (எண்: 06037)
கொச்சுவேலியில் இருந்து செப்டம்பர் 11ஆம் தேதி மாலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.10 மணிக்கு கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தை சென்றடையும்.
பையப்பனஹள்ளி – கொச்சுவேலி சிறப்பு ரயில்: (எண்: 06038)
பையப்பனஹள்ளி யில் செப்டம்பா் 12ஆம் தேதி, மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் கொல்லம், காயங்குளம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று சென்று மறுநாள் காலை 6.35 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தை சென்றடையும்.