திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கை – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவார்கள். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கையாக ரூ.139.33 கோடியை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
திருப்பதி கோவில் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனம் செய்ய வரும் பலர் பல்வேறு காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருவார்கள். அந்த வகையில் திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி, கடந்த ஜூலை மாதத்தில் 23.40 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அந்த வகையில் உண்டியலில் ரூ.139.33 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 1.7 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் 10.97 லட்சம் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தலைமுடி காணிக்கை செலுத்தி இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் மார்ச் மாதத்தில் 19.72 லட்சம் லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து உண்டியலில் காணிக்கையாக ரூ.128.61 கோடியும், ஏப்ரலில் 20.62 லட்சம் பக்தர்கள் ரூ.127.63 கோடியும், மே மாதத்தில் 22.68 லட்சம் பக்தர்கள் ரூ.130.29 கோடியை காணிக்கையாக செலுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஜூலை மாத காணிக்கை குறித்த விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் முகாம்கள் – அரசு நடவடிக்கை!
அதன் படி ஜூன் மாதத்தில் 23.23 லட்சம் பக்தர்கள் ரூ.123.74 கோடி காணிக்கை செலுத்தினர். மே மாத உண்டியல் காணிக்கை ரூ.130.29 கோடி இருந்தது. ஆனால் ஜூலையில் ரூ.139.33 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், தொடர் விடுமுறை காரணமாக இனி வரும் வாரங்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன்பதிவு செய்ய டிக்கெட்கள் தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.