தமிழகத்தில் ஆமக விதிப்படி பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர் – அரசு தகவல்!
தமிழகத்தில் ஆமக விதிப்படி முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதாக தமிழக அரசு சென்னை உயிர்நீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆகம விதி அர்ச்சகர் :
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு இந்து அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களையும் புதுமைகளையும் புகுத்தி வருகிறது. கோயில் நிலங்கள் சரிபார்க்கப்பட்டு இந்து அறநிலையத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு வெளியானது.
கல்லூரிக்குள் நுழைய ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல்!
இந்த நிலையில் கோயில்களில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என கூறி அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்டார். மேலும் இதே கோரிக்கையுடன் ஸ்ரீதர் என்பவரும் வழக்கு தொடர்ந்தார்.
TN Job “FB Group” Join Now
இந்த வழக்கானது ஒரே அமர்வுக்கு மாற்றப்பட்டு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அர்ச்சகர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகின்றார்கள், முறையாக பயிற்சி அளிக்கபடுகிறதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழ்நாடு முழுவதும் 6 பயிற்சி மையங்கள் மூலம் முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கபடுகிறார்கள் என்று அரசு தலைமை வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் சண்முகசுந்தரம் பதிலளித்துள்ளார்.