கல்லூரிக்குள் நுழைய ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல்!

0
கல்லூரிக்குள் நுழைய 'கொரோனா நெகட்டிவ்' சான்றிதழ் கட்டாயம் - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல்!
கல்லூரிக்குள் நுழைய 'கொரோனா நெகட்டிவ்' சான்றிதழ் கட்டாயம் - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல்!
கல்லூரிக்குள் நுழைய ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல்!

தமிழகத்தில் இன்று முதல் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி திறப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மீண்டும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக மருத்துவ கல்லூரியில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ஆகஸ்ட் 16ம் தேதியான இன்று முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, இன்று முதல் மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7000 வரை கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கல்லூரி திறக்கப்படுவதை முன்னிட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது, 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் ரிப்போர்ட் கொண்டு வரும் மாணவர்கள் மட்டுமே கல்லூரியில் அனுமதிக்கப்படுகின்றனர். பரிசோதனை மேற்கொள்ளாத மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்திலேயே பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி முழுவதும், கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணிகள், கொரோனா அறிகுறி இருக்கும் மாணவர்களை உடனடியாக தனிமைப்படுத்துதல், வகுப்பறைகளில் பகுதி, பகுதியாக மாணவர்களை அனுமதித்தல், உடல் வெப்ப நிலை சோதனை, கல்லூரிகளில் முகக்கவசம் வழங்குதல், உடல் நலம் கண்காணிப்பு குழு அமைத்தல் உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு மருத்துவ கல்லூரி டீன்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்லூரிகளில் அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்தும் முறையாக கடைபிடிக்கப்படுகிறது. நல்வாழ்வுத்துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது அரசுக்கு சவாலாக உள்ள போதிலும், தீவிரமாக கண்காணித்து கட்டுக்குள் அரசு கொண்டு வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!