தமிழகத்தில் 11 உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் படிப்பு – யுஜிசி அனுமதி!!
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் 11 கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் படிப்புகளை பயிற்றுவிக்க யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது. தற்போது எந்தெந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்கள்:
தமிழகத்தில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாத காரணத்தினால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதை அடுத்து தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் புதிய நடவடிக்கை ஒன்றிற்கு யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 11 உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் படிப்புகளை பயிற்றுவிக்க யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் திருட்டு – சைபர் க்ரைம் எச்சரிக்கை!!
கடந்த ஒரு வருட காலமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் எடுக்கப்பட்ட வகுப்புகள் நன்கு பலன் அளித்த காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த வகையில் BBA, BCA, B.Com,. MCA, M.sc., MBA உள்ளிட்ட 80 வகையான படிப்புகள் ஆன்லைன் மூலம் பயிற்றுவிக்க யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் இதுகுறித்து யுஜிசி தெரிவித்ததாவது, அண்ணா, பாரதிதாசன், அழகப்பா, காமராஜர், சாஸ்திரா பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 11 உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் ஆன்லைன் படிப்பிற்காக சேரலாம் என்று தெரிவித்துள்ளது. தற்போது மாணவர்கள் ஆன்லைன் படிப்பிற்கு வருகிற ஜூலை மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் படிப்புகள் கற்றுத்தர உயர்கல்வி நிறுவனங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.