தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை – உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்து 2020 ம் ஆண்டு சட்டம் இயற்றியது. இதனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து தமிழக அரசு மனுவை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி:
நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகிவிட்டனர். இதனால் தற்போது ரம்மி விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் மக்கள் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாந்து தங்களிடம் உள்ள மொத்த பணத்தையும் முதலீடு செய்கின்றனர். இந்த பணத்தை மீட்க முடியாமல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்தவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றனர்.
இந்த விளையாட்டு மிகவும் ஆபத்தான ஒன்றாக உள்ளது உள்ளதால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது.
TNPSC குரூப் 4 தேர்விற்கான கட் ஆப் எவ்வளவு? உண்மை நிலவரம் இதோ!
Exams Daily Mobile App Download
அதனால் தமிழக அரசு, மனுவை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசு சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் இந்த சட்டமானது முழுக்க முழுக்க மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது அதனால் உயர் நீதிமன்றத்தின் தடையை நீக்க வேண்டும் என்றும் கூறினார். இதனையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 10 வாரங்களுக்கு பிறகு இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Good job