தமிழக பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் தொடங்கும் ஆன்லைன் வகுப்புகள் – தனியார் பள்ளிகள் தீவிரம்!
தமிழகத்தில் தற்போது தொடர் மழை காரணமாக பல மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் தான் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் முழு நேரமாக நேரடி வகுப்புகளாக செயல்பட்டு வருகின்றது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்காத நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முழு பாடத்திட்டத்தில் இருந்து 30% முதல் 50% வரை பாடங்கள் குறைத்து, குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் படி தேர்வுகள் நடத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
ஆனால், நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் வழக்கம்போல் செயல்படுவதால் முழுமையான பாடத்திட்டங்கள் படி தான் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதனால் ஆசிரியர்கள் முழுமையாக பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், 2 நாட்களுக்கு முன்னதாக தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக மழை இடைவிடாமல் பல மாவட்டங்களில் பெய்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதனால் நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல், இன்றும் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகள் 10, 12,ம் வகுப்பு மாணவர்களுக்கு மழை விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளது. பொதுத்தேர்வு மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.