தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் பள்ளியில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா தீவிர எழுச்சி காரணமாக நடப்பு ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் இருந்து பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமலில் இருந்தது. மேலும் தொற்று பாதித்த அனைத்து மாவட்டங்களிலும், மக்கள் நல்வாழ்வுத் துறை கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அதிகரித்து வந்தது. இந்த வகையில் ஜனவரி 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு குறித்து தனியார் பள்ளிகள் சார்பில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டிம் ப்ரெஸ்னன் – ரசிகர்கள் அதிர்ச்சி!
மேலும் மாணவர்களின் நேரடி கற்றல் முறை அதிகம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில் அண்மையில் இரவு ஊரடங்கு, வார இறுதி நாள் முழு ஊரடங்கு ஆகியவை கிடையாது மற்றும் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டார். இந்த அறிவிப்பின் அடிப்படையில் பல்வேறு குழப்பங்கள் எழுந்தன. அந்த வகையில் கொரோனா தினசரி தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் எந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன என்ற கருத்துக்களும் வெளியானது. தற்போது பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பிப்.3 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு பிறப்பிப்பு!
இந்த வகையில் பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவர்களுக்கு மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் 15 முதல் 18 வயது உள்ள சிறுவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் விரும்பினால் மட்டும், மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பலாம். இந்த வகையில் மாணவர்கள், பெற்றோர்கள் விரும்பினால் ஆன்லைன் முறை மூலம் வகுப்புகள் நடத்தப்படும். இந்த வழிமுறைகளை மாணவர்கள் பின்பற்றுவதன் அடிப்படையில் கொரோனா பரவல் அதிகரிப்பை தடுக்கலாம் என அரசு குறிப்பிட்டுள்ளது.