மாநிலம் முழுவதும் பிப்.3 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு பிறப்பிப்பு!
மேற்கு வங்காளத்தில் பிப்ரவரி 3ம் தேதி முதல் 8 – 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்று மக்களை கடுமையாக பாதித்தது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் மாணவர்கள் கல்வி பாதிப்படைய கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் அனைத்து வகுப்புகளுக்கும் தினசரி பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு அரசின் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று குறைந்து வந்ததை அடுத்து கடந்த 2021ம் ஆண்டு புதிய கல்வியாண்டு தொடங்கியதை அடுத்து பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டது.
மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு – அரசாணை வெளியீடு!
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை வேகமெடுக்க தொடங்கியது. அதனால் மத்திய மாநில அரசுகள் மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் மாணவர்களுக்கு தொற்று பரவும் என்ற அச்சத்தில் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. தற்போது மூன்றாம் அலை கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – தேர்வுத்துறை வெளியீடு!
மற்ற மாநிலங்களை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் பிப்ரவரி 3ம் தேதி முதல் 8 – 12ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதே போல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வழக்கம் போல நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். ஆரம்ப பள்ளிகளை திறப்பது குறித்து பின்னர் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.