தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – UGC முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை யு.ஜி.சி தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை :
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலின் 2வது அலையின் தாக்கம் குறைந்து வந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. அத்துடன் கடந்த நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா? ரவி சாஸ்திரி பரிந்துரை! ரசிகர்கள் விமர்சனம்!
அத்துடன் தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலைகள், கல்லுாரிகள் சார்பில் தொலை நிலைக் கல்வி இயக்ககம் மற்றும் ஆன்லைன் வழிக்கல்விக்கான சான்றிதழ், பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு யு.ஜி.சி தொலைநிலை கல்விக்கான ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்கான விதிமுறைகளை அறிவித்திருந்தது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் – இன்று வெளியீடு!
இந்நிலையில் சில கல்வி நிறுவனங்கள் வெளிநபர்கள் மற்றும் தனியாருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வந்தனர். இது குறித்து புகார் யு.ஜி.சிக்கு கிடைத்துள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி உயர் கல்வி நிறுவனங்கள் வெளி நபர்கள் அல்லது தனியார் மூலமாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தக் கூடாது என்று யு.ஜி.சி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த விதிமுறையை மீறி செயல்படும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யு.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது.