தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – இன்று முதல் துவக்கம்!
தமிழகத்தில் தற்போது துவங்கியுள்ள 2021-22 ஆம் கல்வியாண்டில் கல்லூரி மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் இன்று (ஆகஸ்ட் 9) முதல் ஆன்லைன் வழியாக துவங்கியுள்ளது. மேலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அனைவரும் கல்லூரிக்கு வரும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்
நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உருவான கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வழியாக பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் அலை குறைய துவங்கியவுடன் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
எனினும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பேரலையாக உருவெடுத்த கொரோனா 2 ஆம் அலையால் மீண்டுமாக கல்லூரிகள் அடைக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கம் போல ஆன்லைன் வழியாகவே வகுப்புகளும், தேர்வுகளும் நடைபெற்றது. இந்நிலையில் தற்பொழுது துவங்கியுள்ள 2021-22 ஆம் கல்வியாண்டிலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படும் என சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.
WhatsApp மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் – புதிய வசதி அறிமுகம்!
அந்த வகையில் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 9) முதல் ஆன்லைன் வகுப்புகள் மீண்டுமாக துவங்கியுள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்காக கல்லூரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கல்லூரிக்கு வருகை தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தவிர தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்திருப்பதை தொடர்ந்து கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.