“ஒரே நாடு, ஒரே ரேஷன்” திட்டம் – 17 மாநிலங்களில் அமல்!!

0
"ஒரே நாடு, ஒரே ரேஷன்" திட்டம் - 17 மாநிலங்களில் அமல்!!
“ஒரே நாடு, ஒரே ரேஷன்” திட்டம் – 17 மாநிலங்களில் அமல்!!

மத்திய நிதியமைச்சகம், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை 17 மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன்:

கொரோனா நோய்த்தொற்று 2020 ஆம் ஆண்டு அனைத்து மாநிலங்களையும் பொருளாதார வீழ்ச்சி அடைய செய்துள்ளது. இதன் காரணமாக மாநில அரசுகள் மத்திய அரசின் நிதி உதவியை கேட்டனர். அப்போது மத்திய அரசு, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நிபந்தனை விதித்தது.

TN Job “FB  Group” Join Now

இந்த திட்டத்தை செயல்படுத்துவது மூலமாக உள் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 0.25% சதவிகிதத்தை கடனாக பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நிபந்தனையை ஏற்று 17 அரசுகள் இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் & பதவி உயர்வு கலந்தாய்வு – ஏப்ரல் 30 தேதிக்குள் நடத்த உத்தரவு!!

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, “இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ள மாநில அரசுகளுக்கு கூடுதலாக ரூ.37,600 கோடி கடன் பெறுவதற்கு செலவின தொகை அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டம் மூலமாக நாடு முழுவதும் உள்ள ஏழைகள், புலம் பெயர் தொழிலாளர்கள், தினக்கூலிகள், தற்காலிக பணியாளர்கள் போன்றவர்கள் பயன்பெறுவார்கள்.

இந்தியா விஷன்-2030 திட்டம் – 20 லட்சம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!!

அவர்கள் நாட்டின் எந்த பகுதியில் சென்றாலும் குடும்ப அட்டைகளை பயன்படுத்தி அரசு வழங்கும் பெருள்களை பெற்றுக் கொள்ளலாம். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சீர்திருத்தத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது”, என அவர் குறிப்பிட்டார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!