தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – வல்லுனர் குழுவின் தற்போதைய நிலவரம்?

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் - வல்லுனர் குழுவின் தற்போதைய நிலவரம்?
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் - வல்லுனர் குழுவின் தற்போதைய நிலவரம்?
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – வல்லுனர் குழுவின் தற்போதைய நிலவரம்?

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்து வல்லுநர் குழு அளித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

ஓய்வூதியம்:

தமிழகத்தில் 2003ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் பணிக்கு பின் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு பணியின் போது பிடிக்கப்பட்ட தொகை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை அனைத்து அரசு ஊழியர்களும் போராட்டங்களை நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து 1.4.2003 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – சிறப்பம்சத்துடன் புதிய அப்டேட்!

இதில் 6 லட்சம் அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டனர். மாத ஊதியத்தில் இருந்து அவர்களுக்கான ஓய்வூதிய தொகை பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. மொத்தம் இதுவரை ரூ.46 ஆயிரம் கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள், மரணமடைந்த 23,000 பேருக்கு ஓய்வூதியம் மற்றும் பிற பண பலன்கள் வழங்கப்படவில்லை. அதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்து குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 23 நாட்கள் விடுமுறை – 2022 ஆம் ஆண்டிற்கான பட்டியல் இதோ!

இந்த வல்லுநர் குழுவின் அறிக்கையானது 27.11.2018 அன்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வல்லுநர் குழுவின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அறிக்கை சமர்ப்பித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்திருந்தார். அதன்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி உபரி நிதியாக கிடைக்கும் என்றும் அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!