விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல் – துணை முதல்வர் உறுதி!
வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று துணை முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு அரசு ஊழியர்களும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். சட்டமன்ற பேரவை தேர்தலுக்கு முன்னதாக அங்கு பழைய ஓய்வு திட்டம் அமல்படுத்தப்படும் என்று மாநில துணை முதல்வர் அஜித் பவார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை பரிசீவிப்பதற்கு அரசு தயார் நிலையில் உள்ளதாகவும், டிசம்பர் 17ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஊழியர் சங்கங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரூ.6000 நிவாரணத்தொகை வழங்குவதில் புதிய மாற்றம் – தமிழக அரசின் திட்டம்!!
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும், அதன் பரிந்துரையின் அடிப்படையில முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அரசு பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக இல்லை என்றும், மாநிலத்தின் நிதி நிலைமை காரணமாக முடிவுகள் தாமதமாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.