தமிழகத்தில் 11 மாவட்டங்களில் பழைய மின் கணக்கீடு – மின்வாரியம் உத்தரவு!
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தாழ்வழுத்த மின் நுகர்வோர் பயனீட்டு அளவுகளை கணக்கீடு செய்து, தொகையை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மின் நுகர்வோர் வசூல்
தமிழகத்தில் உள்ள தொழில்துறை நகரங்களில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் உபயோகம் செய்யப்படும் தாழ்வழுத்த மின் நுகர்வோர் பயனீட்டு அளவுகளை கணக்கிட்டு அதற்கான தொகையை வசூலிக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது கொரோனா பரவலுக்கு மத்தியில் அம்மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலை மின் நுகர்வோரிடம் பழைய கணக்கீடுகளின் படி கட்டணம் வசூல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை நிதி கட்டுப்பாட்டாளர், சம்பந்தப்பட்ட மின் பகிர்மான வட்ட கண்காணிப்பு பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கல் – வெளியான முக்கிய தகவல்!
அந்த சுற்றறிக்கையில், ‘தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், நாமக்கல், திருவாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் எவ்வித தளர்வுகளும் கொடுக்கப்படவில்லை. எனவே, இந்த 11 மாவட்டங்களில் மட்டும் PMC என்று அழைக்கப்படும் முந்தைய மாத கணக்கீட்டின் படி மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன் படி இந்த 11 மாவட்டங்களில் இயங்கி வரும் அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் தாழ்வழுத்த வணிக மின் நுகர்வோருக்கு ஜூன் மாதத்தின் பயனீட்டு அளவுகளை கணக்கீடு செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பகிர்மான வட்ட கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக, இது வரை மின் கட்டணம் செலுத்தாத தொழிற்சாலை நுகர்வோரை கண்டறிந்து, அவர்களுக்கான மின் பயன்பாட்டு அளவை சரியான முறையில் கணக்கீட்டு அதற்கான தொகையை வசூலிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.