ஓலா, உபெர் & ரேபிடோ பைக் டாக்ஸி சேவை நிறுத்தம் – அதிரடி காட்டிய டெல்லி அரசு!!
டெல்லியில் ஓலா, உபெர் மற்றும் ரேபிடோ பைக் டாக்சி சேவைகளுக்கு தடை விதித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமல்படுத்தப்படும் என டெல்லி போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
டாக்ஸி சேவைகளுக்கு தடை
பொதுவாக, சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் போக்குவரத்திற்காக டாக்சிகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டாக்சி சேவைகளை பிரபல கேப் நிறுவனங்களான ஓலா, உபெர் மற்றும் ரேபிடோ ஆகியவை வழங்கி வருகிறது. இந்த நிலையில், தேசிய தலைநகர் டெல்லியில் ஓலா, உபெர் மற்றும் ரேபிடோ பைக் டாக்சி சேவைகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, பொது போக்குவரத்து அல்லாத தனியார் பதிவுகளை கொண்ட இரு சக்கர வாகனங்களை வணிக டாக்சிகளாக பயன்படுத்துவது மோட்டார் வாகனச் சட்டம், 1988ன் கீழ் குற்றமாக கருதப்படுகிறது.
Follow our Twitter Page for More Latest News Updates
இந்தியாவின் 20 நகரங்களில் 5ஜி சேவை – ஜியோ நிறுவனம் அறிமுகம்!!
இதன் அடிப்படையில், Ola, Uber மற்றும் Rapido நிறுவனங்கள் வழங்கும் இந்த இருசக்கர வாகன சேவைகள் தடை செய்யப்படுவதாக டெல்லி போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இப்போது, பைக் டாக்சிகளுக்கான தடை உடனடியாக அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடையை மீறி வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.