அக்.13ம் தேதி வரை வங்கிகள் விடுமுறை – முழு விவரங்கள் இதோ!
நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், இம்மாதம் மீதமுள்ள விடுமுறை தினங்கள் குறித்த தகவல்களை காணலாம்.
வங்கி விடுமுறை:
அக்டோபர் மாதம் முழுவதும் நாடு முழுவதும் உள்ள மக்களால் கொண்டாடப்படும் பல விழாக்கள், மதம் சார்ந்த பண்டிகைகள் அதிகமாக உள்ளது. இதனால் அக்டோபர் மாதம் இந்தியாவின் தேசிய மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் மாதத்தில் மொத்தம் 21 வங்கி விடுமுறைகள் இருந்தது. மாநில வாரியான விழாக்கள் மற்றும் பண்டிகையின் போது குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் வங்கிகள் மூடப்படும்.
பாக்கியாவை அம்ரிதா வீட்டிற்கு அழைக்கும் எழில் – புதிய திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!
RBI வழிகாட்டுதல்களின் படி, பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிராந்திய வங்கிகள் குறிப்பிடப்பட்ட தேதிகளில் மூடப்படும். இனி வரும் நாட்களில் 14 விடுமுறை தினங்கள் உள்ளது. வங்கி விடுமுறை தினங்களின் போது மொபைல் மற்றும் இணைய வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் முறையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி தரமான அரிசி! அமைச்சர் தகவல்!
விடுமுறை பட்டியல்:
- அக்டோபர் 10 – ஞாயிறு
- அக்டோபர் 12 – துர்கா பூஜை (மகா சப்தமி) – அகர்தலா, கொல்கத்தா
- அக்டோபர் 13 – துர்கா பூஜை (மகா அஷ்டமி) – அகர்தலா, புவனேஸ்வர், கேங்டாக், கவுகாத்தி, இம்பால், கொல்கத்தா, பாட்னா மற்றும் ராஞ்சியில் வங்கிகள் மூடப்பட்டன.
- அக்டோபர் 14 – துர்கா பூஜை / தசரா (மகா நவமி) – அகர்தலா, பெங்களூர், சென்னை, காங்டாக், கவுகாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம்
- அக்டோபர் 15 – துர்கா பூஜை / தசரா / விஜயதஷ்மி – இம்பால் மற்றும் சிம்லா
- அக்டோபர் 16 – துர்கா பூஜை (தஷைன்) – கேங்டாக்
- அக்டோபர் 17 – ஞாயிறு
- அக்டோபர் 18 – கடி பிஹு – கவுகாத்தி
- அக்டோபர் 19 – மிலாத் நபி – அகமதாபாத், பெலாப்பூர், போபால், சென்னை, டேராடூன், ஹைதராபாத், இம்பால், ஜம்மு, கான்பூர், கொச்சி, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி ராய்பூர், ராஞ்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டன
- அக்டோபர் 20 – மகரிஷி வால்மீகி பிறந்த நாள்
- அக்டோபர் 22 – ஈத்-இ-மீலாத்-உல்-நபிக்குப் பிறகு வெள்ளிக்கிழமை-ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கி மூடப்பட்டது
- அக்டோபர் 23 – நான்காவது சனிக்கிழமை
- அக்டோபர் 24 – ஞாயிறு
- அக்டோபர் 26 – ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்
- அக்டோபர் 31 – ஞாயிறு