தமிழகத்தில் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவு !
தமிழகத்தில் நடப்பாண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 10 வரை ஆன்லைன் மூலம் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் விகிதம் கடுமையாக குறைந்துள்ளதால் கல்வியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நீட் தேர்வு
மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க தகுதியானவர்களாக கருதப்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளியில் பயிலும் மானவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டிற்கான நீட் நுழைவு தேர்வானது செப்டம்பர் 12 ம் தேதி நடைபெறும் என கூறி இருந்த நிலையில் ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆகஸ்ட் 5ம் தேதி நிலவரப்படி அரசு பள்ளி மாணவர்களில் 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தது தெரிய வந்தது. இதில் அதிகபட்சமாக மதுரையில் 505 பேரும் ராமநாதபுரத்தில் ஒன்பது பேரும் விண்ணப்பித்திருந்த நிலையில் கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர்கள் யாரும் விண்ணப்பிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் விண்ணப்பிக்கும் எண்ணிக்கை குறைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
TN Job “FB Group” Join Now
2018-19ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்கள் 19,680 பேர் நீட் தேர்விற்கு விண்ணப்பித்திருந்தனர். அதனை தொடர்ந்து 2019-20 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 8132 ஆக குறைந்தது. தற்போது நடப்பாண்டில் நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது. இதுபோன்று தொடர்ச்சியாக அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பது குறைந்து வருவதால் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதன் அளவும் குறையும் என கல்வியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.