தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இனி எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெட்ரோல் 75 ரூபாய்க்கும் கிடைக்கும் உறுதி அளித்துள்ளார்.
அமைச்சர் உறுதி:
தமிழகத்தில் மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இன்னும் தேர்தலுக்கு இரண்டு வாரங்களை உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களும் வாக்குறுதிகளையும் ஒவ்வொரு கட்சியும் அள்ளித் தெளித்து வருகிறது.
தற்போது தமிழகத்தை ஆண்டு வரும் திமுக அரசு பள்ளி கல்வித்துறைக்கு பல நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. அதேபோல் தேர்தலில் வெற்றி பெற்றால் இனி சமையல் எரிவாயு விலை ₹500க்கும், பெட்ரோல் விலை ரூபாய் 75 க்கு கிடைக்கும் என உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். மேலும் அவர் தகுதியுடைய அனைவருக்கும் மகளிர் உதவித்தொகை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.