தமிழகத்தில் நாளை (நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை – எந்த மாவட்டத்தில் தெரியுமா?

0
தமிழகத்தில் நாளை (நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை – எந்த மாவட்டத்தில் தெரியுமா?
தமிழகத்தில் நாளை (நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை – எந்த மாவட்டத்தில் தெரியுமா?
தமிழகத்தில் நாளை (நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை – எந்த மாவட்டத்தில் தெரியுமா?

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் மேலும் கனமழை அதிகரித்துள்ளதால் இன்று மதியமும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி:

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல முக்கிய நகரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதீத நீர்வரத்தால் தமிழகத்தின் பல அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்தும், முழு கொள்ளளவை எட்டியும் வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு வெல்ல அபாய எச்சரிக்கை விடப்பட்டது. கனமழை பாதிப்பினால் தமிழகம் முழுவதும் ரெட் அலர்ட் அறிவிப்பும் விடுக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.33,000 கவுரவ ஊதியம் – நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு!

இந்நிலையில், தற்போது தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மேற்கு திசையில் நகர்ந்து, தமிழகத்தை நோக்கி உள்ளது. இதனால் தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் அதி தீவிர கனமழையும் மற்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் இன்று தமிழகத்தில் மொத்தம் 25 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டிருந்தது.

Reliance Jio வழங்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து இன்று காலை அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது கனமழை மிகவும் தீவிரமாக பெய்து வருவதால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று மதியம் மற்றும் நாளையும் விடுமுறை அளித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, இன்னும் தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தான் இந்த விடுமுறை அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!