டிச.30 முதல் ஜனவரி 2 வரை ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

0
டிச.30 முதல் ஜனவரி 2 வரை ஊரடங்கு உத்தரவு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
டிச.30 முதல் ஜனவரி 2 வரை ஊரடங்கு உத்தரவு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
டிச.30 முதல் ஜனவரி 2 வரை ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் ஓமைக்ரான் பரவல் ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய கோவிட் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்ப தொடங்கிய சமயத்தில் தான் ஓமைக்ரான் வைரஸ் பரவல் நாட்டில் பரவ தொடங்கியது. முதலில் ஒன்றிரண்டு பேருக்கு இருந்த பாதிப்பு தற்போதைய நிலவரப்படி 500 பேர் என்ற எண்ணிக்கையை தூண்டியுள்ளது. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் ஓமைக்ரான் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்க அரசு ஆலோசித்து வந்த நிலையில், கொரோனா வைரஸின் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய கோவிட் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

உண்மையை மறைத்த பள்ளி நிர்வாகம், அதிர்ச்சியில் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

சமீபத்தில் மாநிலத்தில் நடத்தப்பட்ட கோவிட் ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,636 பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,24,929 ஆக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 46,822 பேர் உயிரிழந்துள்ளனர். அரசின் வழிகாட்டுதலின் படி, கடற்கரைகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுப் பூங்காக்கள் போன்ற பெரிய மக்கள் கூடும் இடங்கள், துறை மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் காவல்துறையினரால் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அதிக மக்கள் கூடுவதை தவிர்க்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Reliance Jio பயனாளர்களுக்கு புத்தாண்டு பரிசு – ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி அதிகரிப்பு!

புத்தாண்டு நேரத்தில் கேரளாவில் பார்கள், ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை கேரளாவில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்படுகிறது. கேரளாவில், தகுதியான மக்களில் 98% பேர் தடுப்பூசியின் முதல் டோஸையும், 77 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் முழுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!