உண்மையை மறைத்த பள்ளி நிர்வாகம், அதிர்ச்சியில் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவும் பாக்கியாவும் நிகிலாவை பார்க்க மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கே நிக்கிலாவின் அம்மா அப்பா எதுவும் தெரியாது என சொல்கின்றனர். பின் பாக்கியா ஸ்கூலிற்கு சென்று பார்க்கின்றனர்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், நிகிலா தற்கொலை செய்துகொண்டு மருத்துவமனையில் அனுமதிக்க அவரை பார்க்க இனியா போக வேண்டும் என அழுகிறார். அப்போது கோபி வேண்டாம் என சொல்ல, பாக்கியா நீங்க எங்களுடன் வாங்க என கோபியை கூப்பிடுகிறார். பின் ராமமூர்த்தி நான் கூட வருகிறேன் என சொல்லி மருத்துவமனைக்கு செல்கின்றனர். அப்போது அங்கே அனைவரும் இருக்க, நிகிலாவின் அம்மா அப்பா வருத்தமாக இருக்கின்றனர்.
என்ன ஆச்சு என ராமமூர்த்தி கேட்க, எதுவும் தெரியவில்லை, ஸ்கூலில் இருந்து யாரும் வரவில்லை என சொல்கிறார். யாரை கேட்டாலும் தெரியவில்லை என சொல்வதாக சொல்ல அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். பின் ஸ்கூலிற்கு வர அங்கே செய்தியாளர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்கள் பசங்களிடம் பேட்டி எடுக்க வர, ராமமூர்த்தி அவரை பேச விடாமல் தடுக்கிறார். பின் ஸ்கூலில் பிரின்சிபல் வந்து பேச, அவர் இந்த பொண்ணு நல்ல படிக்காத பெண் மாடல் தேர்வில் நன்றாக எழுதினால் தான் எக்ஸாம் எழுத விடுவோம் என்று சொன்னோம் அதனால் தான் இப்படி செய்திருப்பாள் என சொல்கிறார்.
அதை கேட்டு இனியா பொய் சொல்வதாக சொல்ல, நாம சென்று பேசலாம் என பாக்கியா சொல்கிறார். அவங்களுக்கு விஷயம் தெரியாமல் இருக்கலாம் அதனால் கூட சொல்லாமல் இருக்கலாம் என சொல்ல, பாக்கியா ராமமூர்த்தியை போக சொல்லிவிட்டு பிரின்சிபல் மேடத்தை பார்க்க செல்கிறார். அப்போது பாக்கியா உள்ளே செல்ல, அங்கே ஒரு டீச்சர் இப்போது மேடத்தை பார்க்க முடியாது என சொல்கிறார். எவ்வளவு நேரம் ஆனாலும் நாங்க காத்திருக்கோம் என சொல்ல, இனியாவும் பாக்கியாவும் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
கண்ணம்மா வீட்டிற்கு சென்ற லட்சுமி, பாரதியை பார்த்து விடுவாளா? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
ஆனால் பிரின்சிபல் அங்கிருந்து கிளம்பி செல்கின்றனர். அதை பார்த்து பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். பாக்கியாவும் இனியாவும் மருத்துவமனைக்கு வருகின்றனர். பாக்கியா நிகிலா அம்மாவிடம் பேச வர நிகிலா ஏன் இப்படி செய்தாள் என உங்களுக்கு தெரியுமா என கேட்கிறார். உங்களுக்கு தெரியுமா என எனக்கு தெரியவில்லை. ஆனால் ஸ்கூலில் உங்க பொண்ணு சரியாக படிக்கவில்லை என சொல்கிறார்கள். அவளின் இந்த நிலைமைக்கு அந்த கம்ப்யூட்டர் சார் தான் காரணம்.
அவர் நிகிலாவை டார்ச்சர் செய்திருக்கிறார். நிகிலா இனியாவிற்கு போன் செய்து நான் சாகப்போறேன் என சொன்னால், அவனை பற்றி யாரும் பேசவில்லை, நீங்க புகார் சொல்ல வேண்டும் என சொல்ல, ஏன் என் மகளின் பெயர் கெட்டு போகவா என நிகிலாவின் அம்மா சொல்கிறார். அவளை பற்றி நாளை எல்லாம் தவறாக எழுதுவார்கள் இது தேவையா என கேட்கிறார். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.