Reliance Jio பயனாளர்களுக்கு புத்தாண்டு பரிசு – ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி அதிகரிப்பு!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ ரிலையன்ஸ் புத்தாண்டு பரிசாக பயனாளர்களுக்கு சூப்பர் ஆஃபர் அளித்துள்ளது. இந்த ஆஃபர் பற்றிய முழு விவரம் கீழே உள்ளது.
ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி அதிகரிப்பு!
உலகம் முழுவதும் டெக்னாலஜி வளர்ச்சி காரணமாக நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் மொபைல் போன் மூலமாகவே தெரிந்து கொள்கிறோம். இந்த வகையில் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் ஏர்டெல் ,வோடபோன் ஐடியா ,ஜியோ ரிலையன்ஸ் போன்ற முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் பயனளார்களுக்கான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தி உள்ளது. அந்த அடிப்படையில் JIO நிறுவனம் அறிவிக்கப்பட்ட விலை உயர்வு டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இருந்தாலும் JIO நிறுவனம் மக்கள் அனைவரும் வேறு நெட்வொர்க்கிற்கு மாறாமல் இருப்பதற்காக பல்வேறு ஆஃபர்களை வழங்கி வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 பொங்கல் போனஸ் – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
ஜியோ நெட்வொர்க் பயனாளர்களை கவரும் விதமாக எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் வழங்க முடியாத ஒரு ஆஃபரை வழங்கியிருந்தது. அதன் வகையில் 1 ரூபாய்க்கு 30 நாட்கள் வேலிடிட்டி உடன் டேட்டா பேக் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இன்னும் சில தினங்களில் புத்தாண்டு வர உள்ளது. புத்தாண்டு ஸ்பெஷல் சலுகை ஒன்றை ஜியோ நெட்வொர்க் தற்போது அளித்துள்ளது. அதன்படி ரூ. 2545 பிரீபெய்டு பேக்கின் வேலிடிட்டி மாற்றப்பட்டு உள்ளது. முன்னதாக ஜியோவின் ரூ. 2545 பேக்கின் வேலிடிட்டி 336 நாட்களாக இருந்து வந்தது. தற்போது இந்த பேக்கின் வேலிடிட்டி மேலும் 29 நாட்களுக்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் ஓமிக்ரான் – 45 பேருக்கு தொற்று உறுதி! சுகாதாரத்துறை எச்சரிக்கை!
அந்த வகையில் ரூ. 2545 பேக்கின் சலுகை இப்போது 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஜியோ நெட்வொர்க் பயன்படுத்துவோரும், புதிதாக ஜியோ நெட்வொர்க்கில் இணைவோரும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த சலுகையின் மூலம் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை வழங்கப்பட்டதால் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்துவோர் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.