EPFO வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – எச்சரிக்கை அறிவிப்பு!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதால் பயனர்கள் தங்களின் விவரங்களை கவனமாக கையாளுமாறு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
EPFO அமைப்பு:
ஊழியர்களின் மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் அவர்களின் வருங்கால வைப்பு நிதியாக வரவு வைக்கப்படும். மத்திய அரசும் அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வழங்கும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கடந்த ஜூன் 1ம் தேதி முதல் PF கணக்கின் விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, அனைத்து கணக்குகளுடனும் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது. இத்துடன் முன்கூட்டியே PF பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி பற்றியும் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!
இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒரு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. PF கணக்கு பயனர்களின் கணக்கில் உள்ள மொத்த பணத்திற்குமான எச்சரிக்கையாக இந்த அறிவிப்பு உள்ளது. அதில் அதிகாரபூர்வ அறிவிப்பை கடைபிடிக்காத பட்சத்தில் பயனர்கள் தங்களின் மொத்த பணத்தையும் இழக்கும் அபாயம் உள்ளது. PF கணக்கு வைத்திருக்கும் 6 கோடி பயனர்களின் தகவல்களையும் கவனமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிறந்த coaching centre
இது குறித்த EPFO ட்விட்டர் தளத்தின் அறிக்கையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தன்னிடம் கணக்கு வைத்திருப்பவர்களிடம் UAN எண், ஆதார் எண், பான் எண் போன்ற தகவல்களையோ அல்லது வங்கி கணக்கு விவரங்களையோ தொலைபேசி அழைப்புகளில் ஒருபோதும் கேட்காது. மேலும் பயனர்களிடம் நேரடியாக தொலைபேசி அழைப்பில் ஆலோசிக்கும் வழக்கம் கிடையாது என்று அறிவித்துள்ளது. நாட்டில் சமீப காலத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் செயல்முறைகள் வளர்ந்துள்ள நிலையில், அது தொடர்பான குற்றங்களும் பெருகி வருகின்றது.