வேதியியலுக்கான நோபல் பரிசு 2020
ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான வேதியியல் துறையின் நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் விஞ்ஞானிகள் இமானுவேல் சார்பெடியர் மற்றும் ஜெனிஃபர் தூத்னா ஆகியோருக்கு இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பரிசு பெறுபவர்களில் இமானுவேல் சார்பெடியர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் மற்றும் ஜெனிஃபர் தூத்னா அமெரிக்காவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசு 2020
காரணம்:
- CRISPR-Cas9 எனப்படும் ஜீன் எடிடிங் தொழில்நுட்பத்திற்கான முறையை உருவாக்கியதற்காக இந்த இரண்டு விஞ்ஞானிகளும் வேதியியலுக்கான நோபல் பரிசினை கூட்டாக பெறுகின்றனர்.
- இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகளின் DNAக்களை கூட மிகத் துல்லியமாக மாற்ற முடியும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்