ஜூலை 19 முதல் முகக்கவசம் அணிய தேவையில்லை – இங்கிலாந்து அரசு!
இங்கிலாந்தில் ஜூலை 19-ம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை சட்டப்பூர்வமாக நீக்க அந்நாட்டு அரசு தயாராகி வருகிறது. அதனால் முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு வீட்டு வசதித்துறை அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் கூறியுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை கட்டுப்படுத்த நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டது. உலக சுகாதார அமைப்பு ஊரடங்கை அமல்படுத்தும் படி அறிவுறுத்தியது. அதன் படி அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கை அறிவித்து கட்டுப்பாடுகளை விதித்தது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் முதல் அலையின் போது கடும் பாதிப்புக்குள்ளாகியது. உயிரிழப்புகள் எதிர்பாராத அளவு உயர்ந்தது. அதிகரித்த உயிரிழப்பாலும், தொற்று பாதிப்பாலும் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் & ஊழியர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் – கர்நாடகா அரசு முடிவு!
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இங்கிலாந்து. அங்கு கொரோனா இரண்டாம் அலை தொடங்கிய போது அந்நாட்டு அரசு தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. இதன் விளைவாக இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது வரை முகக்கவசம் அணிவது நடைமுறையில் உள்ளது. வரும் 19ம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை சட்டப்பூர்வமாக நீக்க அரசு தயாராகி வருகிறது. அதன் பிறகு யாரும் முகக்கவசம் அணிய தேவை இருக்காது என அந்நாட்டின் வீட்டு வசதித்துறை அமைச்சர் ராபர்ட் ஜெனிரிக் கூறியுள்ளார். மேலும் அனைத்து வகை கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு மக்கள் இயல்பு திரும்பும் நிலை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.