LPG காஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – பொதுமக்களுக்கு ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் சிலிண்டரின் விலை சமீப காலமாக உயர்ந்து வருகிறது. மேலும் சிலிண்டர் கொண்டு வரும் டெலிவரி மேனிடம் பணம் எதுவும் கொடுக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.
சிலிண்டரின் விலை:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சமையல் சிலிண்டர் விநியோகம் செய்து வரப்பட்டு உள்ளது. இந்த சமையல் சிலிண்டரை ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை புக்கிங் செய்து வாங்குவதாக இருக்கும். சிலிண்டர் புக்கிங் ஆனதும் அடுத்த நாளே சிலிண்டர் வீடு தேடி வரும். இந்த சமையல் சிலிண்டர்கள் தொடர்பான விதிமுறைகள் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. அது தெரியாமல் நிறைய பேர் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் மேலும் இது குறித்த தகவல்கள் குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.
தமிழக அரசு வேலைக்காக காத்திருக்கும் 75.88 லட்சம் பேர் – ஷாக் ரிப்போர்ட்!
சிலிண்டர் டெலிவரியில் பல சந்தேகங்கள் மக்களுக்கு இருக்கும். அதாவது, சிலிண்டர் கொண்டு வரும் டெலிவரி மேனிடம் கட்டாயமாக பணம் தர வேண்டுமா என்ற சந்தேகம் தான். சிலிண்டரை டெலிவரி செய்வது மட்டுமே அவர்களின் பணி. அதற்கும் சேர்த்தே அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். அதேபோல், சிலிண்டருக்கான டெலிவரி கட்டணம் நாம் புக்கிங் செய்த தொகையிலேயே கழிக்கப்பட்டுவிடும். பொதுவாக, சிலிண்டர் விலை 950 ரூபாய் என்றால் டெலிவரி மேன் நம்மிடம் 1000 ரூபாய் அல்லது அதற்கு மேல் கேட்பார். உண்மையில் சமையல் சிலிண்டர் டெலிவரிக்கு நீங்கள் பணம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. நீங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்தால் உங்கள் வீட்டுக்கே அந்த சிலிண்டரை டெலிவரி செய்வது ஏஜென்சியின் பொறுப்பாகும்.
எனவே இனிமேல், சிலிண்டர் டெலிவரி சமயத்தில் பணம் எதுவும் கேட்கப்பட்டால் நீங்கள் கொடுக்கத் தேவையில்லை. ஒருவேளை உண்மையிலேயே டெலிவரிக்கு பணம் கேட்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கலாம். சிலிண்டர் விற்கும் விலைக்கு, இதுபோல டெலிவரி மேனும் வசூலித்தால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். எனவே இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருந்தால் மிகவும் நல்லது.