குரூப் 1 உட்பட அரசு பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வு இல்லை – மாநில அரசு முடிவு!
ஆந்திர மாநிலத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 உள்ளிட்ட அரசு பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நேர்முகத் தேர்வு இல்லை:
ஆந்திர மாநிலத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இவ்வாறு நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு இருந்ததால், கடந்த 2019ம் ஆண்டு துணை கலெக்டர்கள், டிஎஸ்பி, துணை ஆணையர்கள் போன்ற உயர் அதிகாரிகள் நியமனத்துக்கான குருப் -1 பிரிவை தவிர, மற்ற அனைத்து பிரிவுகளுக்காக நேர்முகத் தேர்வையும் முதல்வர் ஜெகன் மோகன் ரத்து செய்தார்.
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் நகை, ஜவுளி கடைகள் இன்று முதல் திறப்பு!
அதனை தொடர்ந்து குரூப் 1 பிரிவு பணிகளுக்கான நேர்முகத் தேர்வும் ரத்து செய்ய வேண்டும் என கடந்த 2019ம் ஆண்டு, அக்டோபர் 18ம் தேதி அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் தற்போது குரூப் 1 பணிகளுக்கான நேர்முகத் தேர்வும் ரத்து செய்யப்படும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.
TN Job “FB Group” Join Now
இந்த உத்தரவின் படி, ஆந்திர மாநிலத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது. தேர்வு நடைமுறை மீதான வெளிப்படை தன்மையும், நம்பகத்தன்மையும் வெளிப்படையாக இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் செயல்திறனை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.