தமிழகத்தில் 23 மாவட்டங்களில் நகை, ஜவுளி கடைகள் இன்று முதல் திறப்பு!
தமிழகத்தில் வகை இரண்டில் உள்ள 23 மாவட்டங்களிளும் நகை மற்றும் ஜவுளி கடைகள் இன்று முதல் குறிப்பிட்ட நேர கட்டுப்பாடுகளுடன், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அரசு அனுமதி வழங்கங்கியுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் காரணமாக மே மாதம் 10ம் தேதி முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முழு ஊரடங்கை பிறப்பித்தார். மேலும் நோய் தடுப்பு பணிகள் மாவட்ட வாரியாக துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் விரைவாக நடைபெற்று கொண்டிருக்கிறது. முழு ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலின் அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் திறப்பு – பக்தர்கள் அனுமதி!
வகை 1ல் 11 மாவட்டங்களும், வகை 2ல் 23 மாவட்டங்களும், வகை 3ல் 4 மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளாக வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுகின்றன. மேலும், ஜவுளி கடைகள், நகைக்கடைகள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல் இரண்டாம் வகையில் உள்ள 23 மாவட்டங்களிலும் பொதுமக்கள், வணிக அமைப்புகள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள், கருத்துகள் பரிசீலனை செய்யப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதன் படி 23 மாவட்டங்களிலும் இன்று முதல் ஜவுளி, நகை கடைகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மேலும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதி இன்றி செயல்பட வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் வணிக தனியார் நிறுவனங்களிலும் 50% ஊழியர்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை கொடுக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூலை 5ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.