தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் திறப்பு – பக்தர்கள் அனுமதி!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்களாக வழிபாட்டு தலங்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது வகை 3-ல் உள்ள 4 மாவட்டங்களில் மட்டும் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்கள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. குறிப்பாக பொது போக்குவரத்து தடை தொடர்ந்து அமலில் இருந்தது. அதன் விளைவாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதன் காரணமாக பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வங்கிகளுக்கு செல்வோர் கவனத்திற்கு – இன்று முதல் புதிய தளர்வுகள்!
இந்நிலையில் வகை 3-ல் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்கனவே பொது போக்குவரத்து தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் அமலுக்கு வரும் கூடுதல் தளர்வுகளில் வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களிலும் 50 சதவிகித இருக்கைகளுடன் பொது போக்குவரத்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கோயில், தர்கா, தேவாலயம் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் இன்று முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றி வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் முழுவதும் கழுவி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வட்டங்கள் வரையப்பட்டு, கட்டைகள் கட்டும் பணிகள் நேற்று நடைபெற்றன. திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் உட்பட 4 மாவட்டங்களின் பல்வேறு கோயில்களிலும் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, கோயில் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதே போல கோவிகளில் பக்தர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.