தமிழக பள்ளி மாணவர்களுக்கு இனி விடுமுறை கிடையாது? வெளியான ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் இனி வடகிழக்கு பருவமழை குறைய இருக்கிறது. அதனால் இனி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் வழக்கம் போல இடையூறு இன்றி நேரடி வகுப்புகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு தினசரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. எனவே அரசு நோய்த்தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது. அதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் கொரோனா தாக்கம் குறைந்ததால் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது.
EPFO அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – அனைத்து சேவைகளும் ஒரே செயலியில்!
இந்த நேரத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்ததால் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தடுப்பூசி பயன்பட்டால் தொற்று பரவல் எதிர்பார்த்த அளவு குறைந்ததால் படிப்படியாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் வெகு நாட்களுக்கு பிறகு வழக்கம் போல பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் இந்த நேரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு அறிவிப்பு !
இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்தனர். தற்போது தமிழகத்தில் 48 மணி நேரத்திற்கு பின்னர் மழை படிப்படியாக குறைந்து விடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கிட்டத்தட்ட மழை ஓய்ந்து விட்டது. இனி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இனி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.