EPFO அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – அனைத்து சேவைகளும் ஒரே செயலியில்!
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது தனது ஊழியர்களுக்கு அதிக அளவிலான சேவைகளையும், விரைவாகவும் எளிமையாகவும் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. இது குறித்த விளக்கத்தை இந்த பதிவில் காண்போம்.
உமாங் செயலி:
ஊழியர்களின் மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் அவர்களின் வருங்கால வைப்பு நிதியாக வரவு வைக்கப்படும். மத்திய அரசும் அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வழங்கும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் கணக்கில் உள்ள வைப்பு தொகைக்கு ஆண்டு தோறும் குறிப்பிட்ட சதவீதம் வட்டி தொகையை நிர்ணயிக்கிறது. அந்த பணம் PF கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போதையை நடப்பு நிதியாண்டிற்கு ஊழியர்களின் PF கணக்கில் உள்ள தொகைக்கு 8.5% வட்டி விகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு அறிவிப்பு !
இந்த கணக்கில் உள்ள தொகையினை ஊழியர்கள் தங்கள் அவரச கால தேவையின் போதோ அல்லது பணி நிறைவு செய்யும் போதோ பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில், PF கணக்கின் விவரங்களை ஊழியர்கள் அறிந்து கொள்வதற்கும், அவற்றில் தங்களுக்கு தேவையான சேவைகளை மேற்கொள்ளவும் பல வழிகள் உள்ளது. முன்னதாக இந்த பணிகளுக்கான ஊழியர்கள் இதற்கான அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டியதிருக்கும். ஆனால், இனி அது போன்று அலைய தேவையில்லை. ஊழியர்களின் சுமையைக் குறைப்பதற்காக அரசு தரப்பிலிருந்து உமாங் (UMANG) என்ற செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுக்கான பை – புத்தாண்டாக தை 1ம் தேதி மாற்றம்?
இதன் மூலம் உங்கள் PF கணக்கில் உள்ள தொகையை அறிந்து கொள்வது, பணம் எடுப்பது, போன்ற 16 விதமான சேவைகளை இந்த செயலியின் மூலம் நாம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே மேற்கொள்ள முடியும். இது குறித்து EPFO அமைப்பு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உமாங் செயலியின் மூலம் பல சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும், இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு, 9718397183 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தாலே போதும். அதற்கு பதிலாக ஒரு SMS வரும் அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்து உமாங் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.