தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு அறிவிப்பு !
தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றன. தற்போது தமிழக அரசு 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ஆணை பிறப்பித்துள்ளது.
5 ஐபிஎஸ் பணியிட மாற்றம்
தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தமிழக காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இதனை தொடர்ந்து முக்கிய மற்றும் உயர் பொறுப்பில் இருக்கும் பல அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் முதல் நகராட்சி ஆணையர்கள் வரை என அனைத்து தரப்பினரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுக்கான பை – புத்தாண்டாக தை 1ம் தேதி மாற்றம்?
இதை தொடர்ந்து மதுரை போக்குவரத்து துணை காவல் ஆணையர் ஐ.ஈஸ்வர் தற்போது அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சென்னை புளியந்தோப்பு துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட உள்ளார். சென்னை காவல் பயிற்சி கல்லூரியின் முதல்வராக இருந்த எஸ்.ஆறுமுகசாமி தற்போது அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மதுரை போக்குவரத்து துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட உள்ளார். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த என்.மணிவண்ணன் தற்போது அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை காவல் பயிற்சி கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட உள்ளார்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை – பொதுமக்கள் அச்சம்!
அதை தொடர்ந்து மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.விஜயகுமார் தற்போது அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட உள்ளார். அதேபோல் சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பி.அரவிந்தன் தற்போது அந்த பொறுப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் செங்கல்பட்டு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட உள்ளார். இவ்வாறு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே.பிரபாகர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.